tamil christian keerthanaikal

tamil christian keerthanaikal songs lyrics

Tamil christian songs lyrics ,

Christian songs lyrics ,

christian songs tamil lyrics ,

Latest tamil christian songs

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri

பல்லவி கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை நித்தமே புகழ்ந்து துதியுங்கள். அனுபல்லவி சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய. சரணங்கள் 1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும், தேக மில்லாத தூதரே; மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும் வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த் 2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும் ஆரியவுடுக்கள் கோடியே, மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே, சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் […]

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri Read More »

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga

பல்லவி கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம், கன்மலையைப் போற்றக் கூடிடுவோம். அனுபல்லவி கர்த்தரின் தூய சந்நிதி நாடி நித்தியனைத் துதியுடன் கொண்டாடி, சரணங்கள் 1. தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன் தெள்ளமுது தெளிதேன் மாதேவன், மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன், மூவுல கனைத்தும் படைத்த நிமலன். – கர்த் 2. ஆழங்களும் மகா உயரங்களும் அத்தன் திருக்கையில் உள்ளனவே. அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. – கர்த் 3.

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga Read More »

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai

1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே. கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில் காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. 2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும் வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன் கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். 3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின் கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம். வாலிப குமரரும் வலியர் கையம்புகள் பல வானம்பராத்தூணி பண்புடன்

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai Read More »

என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma

பல்லவி என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள் ஏழைக்குக் கிடைத்த தம்மா! அனுபல்லவி உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக் கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? – என்ன சரணங்கள் 1. என்னாத்துமாவே! நீ-இறைவனை என்னாளுமே துதிப்பாய்! என்னாவியே! தேவரட்சகனை யறிந்து என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! – என்ன 2. பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண் யார்க்கு மதிப்பானேன்; வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்; நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. – என்ன 3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே ஆண்டாண்டாக நிலைக்கும்; மீண்டுமவர் புயத்தால்

என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma Read More »

எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam

பல்லவி எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா, எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா. அனுபல்லவி என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள் சரணங்கள் 1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன் ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே; இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம் அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள் 2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி,

எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam Read More »

உன்னதமானவர் சன்னிதி – Unnathamanavar sannithi

பல்லவி உன்னதமானவர் சன்னிதி மறைவில் வந்தடைக்கலம் சரண் புகுவேன். சரணங்கள் 1. சத்தியம் பரிசை கேடகமாகும் சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன். 2. வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம் விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார். 3. வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி, வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார். 4. நீடித்த நாட்களால் திருப்தியாக்கி நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார். 5. பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும் சதா காலமும் மகிமை உண்டாகும்.

உன்னதமானவர் சன்னிதி – Unnathamanavar sannithi Read More »

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum

பல்லவி ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே அனுபல்லவி ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே, ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்; ஐயா, நேயா, தூயா, ரட்சியும்; ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு சரணங்கள் 1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா? ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா, தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா, தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே, தாதா! நாதா! நீ தா! நீ கா! தருமப்

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum Read More »

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean

பல்லவி இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை அனுப்பும், ஏசுவே, இப்போதே போகிறேன். அனுபல்லவி இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;- சரணங்கள் 1. மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான வனங்கள், கடல்கள் கடந்தோ, தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச் சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; – இதோ 2. வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும், வணங்காக் கழுத்துள்ளோருக்கும், அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது சரியென்றிணங்கி எல்லா

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil

பல்லவி ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் ஆராதிக்க வேணுமே! அனுபல்லவி ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி சரணங்கள் 1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன், இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன், இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும் எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி 2. சத்து சித்தானந்த மான தனிமுதல், சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள், ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil Read More »

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai

1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை, துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை, பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை, இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன், பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன், எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன், முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன், ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai Read More »

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

1. அல்லேலூயா என்றுமே அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள், என்றும் அவரைத்துதியுங்கள். வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து வல்லமை நிறைந்த கிரியைக்காக அல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள், என்றும் அவரைத்துதியுங்கள். வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும் யாழோடும் குழலோடும் தாளங்களுடனும் அல்லேலூயா அல்லேலூயா 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள். என்றும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள், சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள். அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks