Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே

பல்லவி

சுத்தபரன் சுத்த ஆவியே
சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை
சொல்லவரம் எனக்கீவையே.

அனுபல்லவி

மெத்தவும் அசுத்தன் நானே
மேவினேன் நின் பாதந்தானே
உத்தமனம் கெஞ்சுவேனே
உன்னையல்லா லழிவேனே. – சுத்த

சரணங்கள்

1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர்
அருளைப் பெறவும் போகுமோ?
மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி
விசுவாசங் கொள்ளலாகுமோ?
கடினம் என் மனங்கல்லு
கத்தா ஓர் வார்த்தை சொல்லு
திடசீவன் வரக்கொல்லு
சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த

2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும்
சுகிர்தந்தனை யானறிந்தேன்
உவந்தளிக்கும் வரங்களால் என் இதயத்துக்
கொளிதருவதை யுணர்ந்தேன்.
அவமாகா மெய்விஸ்வாசம்
அதனால் தூய்மை நன்;னேசம்
கவர்ந்துனைத் தொழும்பாசம்
கனிந்தளித்தாய் நல்வாசம்.- சுத்த

3.பூமியெங்கும் உள்ள சபையை வரவழைத்துப்
பொற்புற விணைத்துச் சேர்த்துச்
சாமியொளிதந்து தூய்மை அளித்துயேசு
தற்பரனில் நித்தங்;காத்து
ஷேமகரஞ் செய்யும் நேயா
தின்மையைப் பகைக்குந் தூயா
பாமரர்க்கு நற்சகாயா
பார்த்திபா என்றென்றும் மாயா.- சுத்த

4.நித்தமும் பவம் பொறுக்கிறாய் திருச்சபையில்
நீதிதீர்வை நாளிலேயன்பாய்ச்
செத்த விசுவாசிகளையும் என்னையும் உடல்
ஜீவனோடெழுப்புவாய் இன்பாய்.
நித்திய ஜீவன் தருவாய்
நின்மலன் யேசுவை மெய்யாய்ப்
புத்தியாகவே மனம்வாய்
பற்றினோர்க்கு மா தயவாய்.- சுத்த

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks