Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே

Lyrics

சிலுவையில் அறையுண்ட ஏசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன்
என் பாவ சுமைகளோடு
உம் பாத நிழலில் நிற்கின்றேன்

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

தந்தையே இவர்களை மன்னியும்
அறியாமல் செய்தார்கள் என்றீர்
மாறாத இரக்கத்தால் என்னை
மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே


ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே


அம்மா இதோ உம் மகன் என்றீர்
இதுவும் தாய் என்றே நேசத்தால்
அன்னையின் அன்பினில் நாளுமே
என்னையும் வாழ்ந்திட செய்யுமே


ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

தாகமாய் உள்ளதே இறைவா
ஏன் என்னை கை விட்டீர் என்றீரே
கைவிடா நேசத்தால் எனக்கும்
பாவம் மாற்றும் ஜீவ நீரை தாருமே


ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

தந்தையே உமது கையில்
என் ஆவியை ஒப்படைக்கின்றேன்
என்னையே உமது கரத்தில்
முற்றிலும் கையளிக்கின்றேன்

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks