Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்,
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்,
ஜீவத் தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்,
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா
ஒரு போதும் கைவிடீர்.

4. ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்,
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்,
இயேசு நாதா இயேசு நாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்.

அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது;

Which is come unto you, as it is in all the world; and bringeth forth fruit, as it doth also in you, since the day ye heard of it, and knew the grace of God in truth:

கொலோசெயர் : Colossians : 1:6

#christianmedias

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks