Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

பல்லவி

புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண்

சரணங்கள்

1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்
ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்

3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version