Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி

போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி

சரணங்கள்

1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி

2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம்
தீயி லகப்படாமல் தூக்க வந்தார்;
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே – சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே – அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே – போற்றி

4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற – இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ,
வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ? – போற்றி

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks