Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும்

பல்லவி

பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு,

அனுபல்லவி

பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா,
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும்

சரணங்கள்

1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்,
போதக நாயனே, மாதவ தூயனே,
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும்

2. ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே,-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks