பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven

பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )
கொண்டாடுவேன் (வோம்)
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

1. அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே

நன்றி நன்றி நன்றி – 2

2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா

3. கல்வாரி சிலுவையினால்-என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)
அடிமைக்கு கிடைத்ததையா

4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து -உம்
அன்பை ஊற்றினீரே

5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன்-என்
உயிரான கிறிஸ்து வந்ததால்-உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

6. இவ்வுலகம் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா – உம்
மிகுந்த இரக்கத்தினால்

7. வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே – கடும்
வெயிலில் குளிர் நிழலே

8. பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு – அது
எத்தனை மேலானது

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks