Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

பல்லவி

நிறைவுற வரந்தா,-நியமகம்
நிறைவுற வரந்தா.

அனுபல்லவி

நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை

சரணங்கள்

1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்கு
உண்டமைக்கும் எங்கள் தெய்வமே!
உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை

2. ஆதம் தனித்த நிலையது-நல்ல
தல்லவென்று கண்டவனது
அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை

3. ஆபிரகாம் எலியே சரும்-மன்
றாடிய வேண்டுதல் கேட்டொரு
அங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை

4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்
ஓப்பந்தத் தீண்டா துனது கை
ஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. – நிறை

5. ஒப்பந்தத் தாலிரு சார்பினர்-தமை
உற்றவர் மற்றவர் நற்றவர்
உன்னதா சீரடைந்துன் மகிமை தர. – நிறை

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks