Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால்

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால்

காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார்
குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர்

சுகமே சுகமே சுகமே சுகமே

அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன்
தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன்
பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர்
வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர்

கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன்
எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன்
இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே
எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே

நொறுங்குண்ட இதயத்திற்கு ஆறுதல் நீரே
உடைந்த என் உள்ளத்திற்கு தேறுதல் நீரே
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் செய்தீர்
ஒடுங்கின ஆவி போக்கி துதிக்க செய்கிறீர்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks