Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Song Lyrics: Sister Saral Navaroji

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று, பறவை, ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே

2. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டடைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே

3. வானமும் பூமி யாவும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர்

4. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம்

5. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்

6. காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்
—————————————————————————
Kathiravan thondrum kaalaiyithe
Kathiravan thondrum kaalaiyithae
Puthiya kirupai pozhinthiduthae – nal
Thuthi seluththiduvom Yesuvukkae

1. Vaana sudarkal kaanaga jeevan
Vaazhththidavae paran maatchimaiyae
Kaattu, paravai, oottru neerodai
Karththarukkae kavi paadiduthae

2. Kaattil kathari kaanaga odai
Kanndataiyum veli maangalai pol
Thaagam theerkkum jeeva thanneeraam
Tharparan Yesuvai thaediduvom

3. Karththar kirubai endrendrum onga
Karththarae nallavar endruraippom
Kaerubeengal maththiyil vaazhum
Karththar ikkaalaiyil ezhuntharulvaar

4. Enthan uthadum unthanai potrum
En karangal kuvindhae vanangum
Baakkiyam naan kanndadainthaenae
Yaakkobin devanae en thunnaiyae

5. Kaalai vizhippae karththarin saayal
Kannkalum seviyum kaaththirukkum
Paatham amarndhu vaedhamae rusiththu
Geethangal paadiyae magizhnthiduvaen

6. Vaanamum poomi yaavum padaiththeer
Vaanam thiranthae thondriduveer
Aaval adanga ennaiyum azhaikka
Aaththuma naesarae vandhiduveer

✝️ ஒரு நிமிட தியானம் ✝️

நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.. ஏரேமியா 30:17

உள்ளத்தில், சரீரத்தில், வாழ்க்கையின் சூழ்நிலையில், குடும்பத்தில்,வேலையில்,அரசியல் பாதையில் ஊழியப்பாதையில், எல்லாவற்றிலும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது..மனதளவில் ஆரோக்கியம் இருக்கும்போது சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்..ஒவ்வொரு மனிதர்களும் வாழும் நாட்களில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதைதான் அதிகம் விரும்புவார்கள்…ஆரோக்கியமான ஆசீர்வாதங்களை இழந்து காணப்படுகிறீர்களா…ஆண்டவர் உங்களுக்கு எல்லாவிதத்திலும் ஆரோக்கியத்தை தருவார்..தரித்திர நிலையை மாற்றி ஆரோக்கிய நிலையை தருவார்..கவலைப்படாதீங்க…காரணமில்லாமல் செய்யாத காரியத்திற்காக உங்களை காயப்படுத்தி இருக்கலாம்..பிறர் சொன்ன சொற்களினால் உங்க வலி கொடியதாக இருக்கலாம்..சோர்ந்துப்போகாதீங்க…உங்க ரணத்தை ஆண்டவர் ஆற்றுவார்..உங்க காயங்கள் மாறும்…ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்பதை மறந்துபோகாதீங்க…உங்களை ஆரோக்கியமாக்கி காயங்களை ஆற்றுகிற ஆண்டவரை பற்றிக்கொள்ளுங்கள், அல்லேலூயா, ஆமென்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks