கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar

கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2

2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்

3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்

4. வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று,
விடுவித்துக் காத்துக்கொண்டார்

5. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

https://www.youtube.com/watch?v=wIp2-7cyZPc

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks