கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே – நான்

இறுதிவரை என் வாழ்வு
இயேசப்பா உமக்குத்தானே

1.கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ராயேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும், இரவினிலும்
பாதுகாக்கின்றார்

3.போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும், எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks