கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri

பல்லவி

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை
நித்தமே புகழ்ந்து துதியுங்கள்.

அனுபல்லவி

சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து
முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய.

சரணங்கள்

1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும்,
தேக மில்லாத தூதரே;
மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும்
வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த்

2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும்
ஆரியவுடுக்கள் கோடியே,
மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே,
சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் நீரும், – கர்த்

3. மூடிடும் பனியாலாங்கட்டி-முழங்கிப்பாடும்,
ஆடிடுங்குளிரே பனிக்கட்டிக்
காடெலா முறைந்த நீரே-கல் மழையான நீரே,
தேடிடும் இரவே பகலே,-தினம் வருமொளியே இருளே – கர்த்

4. மின்னலே மேக சேனையே,-மாபூமி நீயே
சின்னதே சிகர மலைகளே,
நன்னய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள்,
எண்ணிடாக்கடலே, நதிகள்-ஏகமாயெழுந்து தொழுங்கள் – கர்த்

5. மச்சமே நீந்தும் செந்துவே-மாபரனைப்போற்றும்
உச்சமெ ழும்பறவையே,
பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிலா நாட்டு மிருகம்
மிச்சமாய்ப்போற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், – கர்த்

6. மனுக்களே மனுக்கள் சாதியே,-ஏகோவா தனையே
வணங்கிடு மிஸ்ரவேலரே,
தினமவரூழ்யஞ் செய்வோர்,-திகழ் பரதீசிலுய்வோர்,
மனமதில் தாழ்மையுள்ளோர்,-மிகவெழு நெருப்பை வெல்வோர். – கர்த்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks