கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே-2

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே-3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை

1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
இணைந்து துதித்திடுவோம்
அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை -2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்-2-ஆனந்தமே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks