கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்-karthar mel Nambikai vaikum

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்

உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks