Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
கண்மணி போல காத்துக் கொள்ளும்
கறை திறை இல்லா வாழ்வளித்து
பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும்

1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்
புல்வெளி மேய்ச்சல் காண செய்து
அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்
உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்

2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்
கழுகினை போல என் பயங்கள் மாற்றும்
வானிலும் பூவிலும் நிலை நிற்கும்
வரங்களினாலே எனை நிரப்பும்
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்

3. ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன்
தோழ்களில் என்னை சுமந்து செல்லும்
தோழரைப் போல அன்பு செய்யும்
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்

உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்தில் உள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

ஆதியாகமம் | Genesis: 9:2

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks