Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா

1.முள்ளும் புதரும் காடும் மழையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத

2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
ஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ – காணாத

3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத

4.துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்பவரே
கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய
கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் – காணாத

5.எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா – காணாத

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks