Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பணிவோடுண்மையாக
இஸ்தோத்திரிப்போமாக.

2. நாள் பேச்சைப்போல் கழியும்
தண்ணீரைப்போல் வடியும்
இதோ, இந்நாள் வரைக்கும்
இவ்வேழை மண் பிழைக்கும்.

3. அநேக விதமான
இக்கட்டையும், உண்டான
திகிலையும் கடந்தோம்;
கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.

4. அடியார் எச்சரிப்பும்
விசாரிப்பும் விழிப்பும்,
தயாபரா, நீர்தாமே
காக்காவிட்டால் வீணாமே.

5. தினமும் நவமான
அன்பாய் நீர் செய்ததான
அநுக்ரகத்துக்காக
துதி உண்டாவதாக.

6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
நொந்தாலும் உம்மைச் சார்ந்து
நிலைக்கிறதற்காக
திடன் அளிப்பீராக.

7. மா ஜன சேதத்துக்கும்,
உண்டான போர்களுக்கும்
ஓர் முடிவு வரட்டும்,
நொறுங்கினதைக் கட்டும்.

8. சபையை ஆதரித்து
அன்பாய் ஆசீர்வதித்து
எல்லாருக்கும் அன்றன்றும்
அருள் உதிக்கப்பண்ணும்.

இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.

For, lo, I raise up the Chaldeans, that bitter and hasty nation, which shall march through the breadth of the land, to possess the dwellingplaces that are not theirs.

ஆபகூக் : Habakkuk:1:6

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks