Imayamum Kumariyum yellai kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
நெஞ்சார் அன்பின் தியாகசேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே
சாந்தி இதற்கிலை ஈடே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே

உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே
பரனர செனப் பகர் தெருளே
பாரதம் போற்ற மெய்ப் பொருளே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே

ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.

Therefore the law is slacked, and judgment doth never go forth: for the wicked doth compass about the righteous; therefore wrong judgment proceedeth.

ஆபகூக் : Habakkuk:1:4

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks