என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன

2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே – ராஜா

3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – ராஜா

4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இனணத்தீரையா

5. மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே – இது

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks