என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma

பல்லவி

என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள்
ஏழைக்குக் கிடைத்த தம்மா!

அனுபல்லவி

உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக்
கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? – என்ன

சரணங்கள்

1. என்னாத்துமாவே! நீ-இறைவனை
என்னாளுமே துதிப்பாய்!
என்னாவியே! தேவரட்சகனை யறிந்து
என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! – என்ன

2. பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண்
யார்க்கு மதிப்பானேன்;
வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்;
நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. – என்ன

3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே
ஆண்டாண்டாக நிலைக்கும்;
மீண்டுமவர் புயத்தால் மெத்தப் பராக்கிரமஞ்செய்தார்;
மேட்டிமையுள்ளவரை மேதினியில் அழித்தார். – என்ன

4. பலவான்களானோரை-ஆசனம் விட்டுப்
பாதாளத்தில் தள்ளினார்;
தலமதில் தாழ்ந்தோரைத் தம்மாசனமுயர்த்தித்,
தாகம் பசியுள்ளோர்க்குச் சகல நன்மை யளித்தார். – என்ன

5. நேசன் ஆபிரகாமை-பின் சந்ததியை
நினைத்திரக்கஞ் செய்தோனாய்,
தாசன் இஸ்ரவேலைத் தாங்கியே யாதரித்த
தற்பரன் கிருபையை நித்தமுமறவேனே – என்ன

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks