Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி

1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது?

2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,
குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;
பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,
வதைத்திட்டார்கள்.

3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;
அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து
வதை செய்தது.

4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,
அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனைத் தீர்ப்பர்.

5 ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;
நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்
கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்
பண் உமக்கேற்கும்.

6 இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;
நீர் உமதாவியை அளித்துவாரும்
பலத்தைத் தாரும்.

7 அப்போ நான் உமதன் நிறைந்து,
பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்.

8 பரகதியிலே நான் வைக்கப்பட்டு
கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று
எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,
இஸ்தோத்திரிப்பேன்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks