ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil

பல்லவி

ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
ஆராதிக்க வேணுமே!

அனுபல்லவி
ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி

சரணங்கள்

1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி

2. சத்து சித்தானந்த மான தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks