Aandava Unthan Seavaiku adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

பல்லவி

ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
தூண்டும் உன் ஆவி அருள்வாய்.

அனுபல்லவி

என்னைத் தியாகிக்க ஏவும்
உன் அனல் மூட்டிடுவாய்,
இந்நிலம் தன்னில் மாளும்
மனுமக்கள் மீட்பிற்காக. – ஆண்டவா

சரணங்கள்

1. புசிக்கக் பண்டமில்லாமல்
பூவில் இல்லமுமே அன்றி,
நசித்து நலிந்து நாட்டில்
கசிந்து கண்ணீர் சொரிந்து,
தேச மெல்லாம் தியங்கும்
நேசமக்கள் சேவைக்கே,
நிமலா, எனை ஏற்றுக்கொள். – ஆண்டவா

2. வறுமை வன் கடன் வியாதி,
குருட்டாட்டம் கட்டி கடும்
அறிவீனம் அந்தகாரம்
மருள் மூடி மக்கள் வாடும்,
தருணம் இக்காலமதால்,
குருநாதா, உனதன்பை
அருள்வாய், அடியேனுக்கே. – ஆண்டவா

3. அருமை ரட்சகா, உன்றன்
அரும்பாடு கண்ணீர் தியாகம்,
பேரன்பு பாரச் சிலுவை,
சருவமும் கண்ட என்றன்
இருதயம் நைந்துருகி,
வெறும் பேச்சாய் நின்றிடாமல்
தருணம் எனையே தந்தேன். – ஆண்டவா

4. உலகே உனதாயினும்
தலைசாய்க்கத் தாவில்லாமல்,
நலமே புரிந்து திரிந்தாய்;
எல்லாம் துறந்து யான் உன்
நல்லாவி கொண்டுழைக்க,
வல்லா, உனின் சிலுவை
அல்லால் வழி வேறுண்டோ? – ஆண்டவா

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

And I will put enmity between thee and the woman, and between thy seed and her seed; it shall bruise thy head, and thou shalt bruise his heel.

ஆதியாகமம் | Genesis: 3: 15

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks