தேவன் வருவார் தேவன் வருவார்- Devan Varuvaar Devan Varuvaar

தேவன் வருவார் தேவன் வருவார்
இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார்

1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார்
தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார்
துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார்
தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன்

2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே
தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே
கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும்
விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன்

3. ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ
ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ?
கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார்
கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா – தேவன்

நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

I will speak of thy testimonies also before kings, and will not be ashamed.

நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.

And I will delight myself in thy commandments, which I have loved.

நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

My hands also will I lift up unto thy commandments, which I have loved; and I will meditate in thy statutes.

நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

ZAIN. Remember the word unto thy servant, upon which thou hast caused me to hope.

அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.

This is my comfort in my affliction: for thy word hath quickened me.

சங்கீதம் :119 46-50.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks