Yesu Nathar Kiristhesu nathar இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர்

இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம்

இயேசு நாதர் – கிறிஸ்தேசு நாதர் – உந்தன்
இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார்

1. ஆதியிலேதான் வனத்தினின்று – ஏவை
ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று – தரை
மீது கெத்சமனே வனஞ் சென்று – இரத்த
வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட – இயேசு

2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் – உற்ற
ஜென்ம கன்ம பாவங்கள் போக்க – ஒரு
ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில் பிறக்க – திருச்
சித்தங்கொண்ட தேவ குமாரனான – இயேசு

3. விலக்கப்ட்ட மரக்கனி புசித்து – பரன்
வெறுப்பை யடைந்த யிந்தப் பூவுலகத்து – வந்து
சிலுவை மரத்தையும் தன் தோளிலெடுத்து – சுமை
சுமந்து தீர்த்த மத்தியஸ்தனான – இயேசு

4. மண்ணிலிருந்துண்டான முதலாதாம் – செய்த
மா பாவங்கள் நீக்கி இரண்டாமாதாம் – ஆக
விண்ணிலிருந்துண்டாகி மெய்ப்போதஞ் செய்து
மேதினியை மீட்ட சற்குருவாம் – இயேசு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks