ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்-என்னை
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. அப்பாவை அறிந்திடணும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளி பெறணும்
மகிமையின் அச்சாரமே

5. என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையாலல்ல உம் கையாலே
எழுதிடுமே ஏங்குகின்றேன்

6. அரண்களை தகர்த்தெறியும் – என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும்

7. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks