Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன்

நல்வழி மெய் ஜீவன்
பல்லவி
நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை
நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே
அனுபல்லவி
செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர – நர
ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர
திருமறை வேதா அருள் நிறை போதா
கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா! – நல்
சரணங்கள்
1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே – அந்த
சத்தியத்தில் நான் நடக்கச் சக்க்தி ஈவாயே
சுத்த மறையாம் சுவிசேஷத்தை ஈந்தாயே – அதின்
சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே
தொழுதகம் நேர்ந்தேன் அழுதகம் ஓர்ந்தேன்
எளியனுள் சோர்ந்தேன் முழுதுமே சார்ந்தேன் உனதடி – நல்
2.செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே – நல்ல
ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே
முத்தி நெறி காட்டும் மார்க்கம் சுத்த நல் தேனே – அதின்
மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ கோனே
முடவியல் மாற நடையது தேற
அடமது மாற திடமனதாய்க் கரையேற – நல்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks