Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை

1 தந்தை தன் சிறு பாலனை
கையேந்தி தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.

2 அவ்வாறே என்னை, தந்தையே,
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.

3 மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை.

4 அவ்வாறே, நேச ரசஷகா
உம் அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.

5 தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.

6 அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks