Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.

2. அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.

3. இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks