தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean Sthotharipean Yesu

பல்லவி

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே

சரணங்கள்

1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத்

2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத்

3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

5. நாளைத்தினம் ஊண் உடைக்காய் என் சிந்தனைகளைக்
கவலையற்ற தாக்கினதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை
சீக்கிரமாய் காண்பதினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால்,

நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்;

என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்;

இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே

உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

Thus saith the LORD of hosts;

If thou wilt walk in my ways,

and if thou wilt keep my charge,

then thou shalt also judge my house,

and shalt also keep my courts,

and I will give thee places to walk

among these that stand by.

சகரியா” Zechariah”3 ✝️

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks