தேவன் இயேசு வருவார் நம்- Devan Yesu Varuvaar Nam

தேவன் இயேசு வருவார் – நம்
தேவை யாவும் அறிவார்
காலம் அறிந்தே வருவார் – நம்மைக்
கண் போலக் காத்து அருள்வார்

சரணங்கள்

1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது
தந்தை கல்லினைத் தருவதுண்டோ?
முட்டைக்கு பதிலாய் பாம்பினையும்
மூடன் எவனும் தருவதுண்டோ?
விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா
வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன்

2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல்
உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள்
கானக புஷ்பங்களைப் போஷிப்பவர்
கருத்துடன் நம்மையும் காத்திடுவார்
காலம் வரும் வாழ்வும் வரும் உறுதி கொள்ளுவோம்
கர்த்தரவர் பாதத்தில் காத்து இருப்போம் – ஆகாகா – தேவன்

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

VAU. Let thy mercies come also unto me, O LORD, even thy salvation, according to thy word.

அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

So shall I have wherewith to answer him that reproacheth me: for I trust in thy word.

சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

And take not the word of truth utterly out of my mouth; for I have hoped in thy judgments.

நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

So shall I keep thy law continually for ever and ever.

நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.

And I will walk at liberty: for I seek thy precepts.

சங்கீதம் :119

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks