பல்லவி
தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி
தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ
சரணங்கள்
1. நித்திய ஜீவநதி நீரே யாயினும்
நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக
2. கடற்காளானின் கடும் காடியோ உமக்
கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக
3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட
ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக
4. தேவ வசன ஞான திவ்விய பாலில்
தேட்டமாய் நானும் என்றும் உண்டு பருக – தாக
5. உந்தன் மாமிசம் ரத்தம் போஜன பானம்
எந்தன் ஜீவனுக்கென்றும் ஏற்றதாய்க் கொள்ள – தாக
21உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
22நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.
23பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
24உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
25என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119 20:25
Follow us : Instagram.com/christianmedias