தாகத்தைத் தீருமையா அபி-Thaakaththai Theerumaiya Abi

பல்லவி

தாகத்தைத் தீருமையா – அபி
ஷேகத்தைத் தாருமையா – எங்கள்

1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே எம்மில் – எங்கள்

2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ,
அத்தனே உமது அருள் பலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்வோம் – நாங்கள் – எங்கள்

3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே,
பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
பரிசுத்த மாவோமே – நாங்கள் – எங்கள்

4. சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் – நாங்கள் – எங்கள்

கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

And shall make him of quick understanding in the fear of the LORD: and he shall not judge after the sight of his eyes, neither reprove after the hearing of his ears:

நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

But with righteousness shall he judge the poor, and reprove with equity for the meek of the earth: and he shall smite the earth with the rod of his mouth, and with the breath of his lips shall he slay the wicked.

நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

And righteousness shall be the girdle of his loins, and faithfulness the girdle of his reins. ஏசாயா : Isaiah:11 ✝️

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks