சோபனமாக சுப தினமே- Shobanamaaga suba dhiname

பல்லவி

சோபனமாக சுப தினமே
மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர்
சுப ஜெய மங்களமே (3) – ஆமென்

அனுபல்லவி

சீர்பெற திருமணம் என்றும் வாழ்க
அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே

சரணங்கள்

1. ஆனந்தமாக வாழ்ந்திடவே
ஆண்டவனருளால் அனுதினமே
அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே
அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே – சீர்பெற

2. மாநில மீதில் மனமுவந்தே
மங்கள வாழ்வு தனிற் சிறந்தே
பாலெனப் பொங்கிப் பல வளனும்
பாக்கியம் புகழும் பரவிடவே – சீர்பெற

3. சந்ததி பெருகித் தழைத்திடவே
சாஸ்தவமாக நிலைத்திடவே
ஆனந்தமாக அமைந்திடவே
ஆரருள் வாழ்க்கை அழகுறவே – சீர்பெற

4. மங்களமாகும் இத்தினம்போல்
மகிழ்வுடன் மாண்பாய் இருபேரும்
தங்கவண் செல்வ நாயகனின்
தாழ்வறு திவ்விய அடி நிழற்கீழ் – சீர்பெற

பின்னும் அவன் அவர்களை நோக்கி:

நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து,

மதுரமானதைக் குடித்து,

ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்;

இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள்,

விசாரப்படவேண்டாம்;

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

10.Then he said unto them, Go your way,

eat the fat,

and drink the sweet,

and send portions unto them

for whom nothing is prepared:

for this day is holy unto our Lord:

neither be ye sorry;

for the joy of the LORD is your strength.

நெகேமியா :Nehemiah:8✝️

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks