கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS

Lyrics
கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
தேவனையன்றி கண்மலையும் யார் – 2
என்னை பெலத்தால் இடைக்கட்டி
திறந்த வாசலை தருகிறார் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்
நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2
ஆத்துமாவை நித்தமும் தேற்றி
நீதியின் பாதையில் நடத்துவார் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2
எந்தன் தேவன் என்னோடே இருப்பார்
எல்லா மதிலையும் தாண்டிடுவேன் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மை கிருபை என்னை தொடரும் – 2
கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க
மனுஷன் எனக்கு என்ன செய்வான் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks