கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு
கன்மலைமேல் நிறுத்திடுவார் என் இயேசு 2
கண்ணீர் துடைத்தீடுவார்
காலமெல்லாம் காத்திடுவார் 2
அவரால் கூடாதது ( என் இயேசுவால்)
ஒன்றுமே இல்லையே
1. உன்னதரே உந்தன் நாமம் தொழுவேன்
உயர்ந்தவரே உம்மைப்பாடி புகழ்வேன் 2
தாங்கி நடத்திடும் உம் கிருபை பெரிது
தாழ்வில் நினைத்த உம் கிருபை பெரிது 2
யாரென்னை மறந்தாலுமே
என்னை மறவாத தெய்வம் நீரல்லோ 2 – அவரால் . . .
2. இருளான வாழ்வெல்லாம் ஒளியானதே
கண்ணீரின் வாழ்வெல்லாம் களிப்பானதே
அலைகள் மோதி எதிர் வந்தாலும்
கலங்கிடாத வாழ்வே வேண்டும்
அசையா என் நம்பிக்கை
நங்கூரம் என் இயேசுவே – அவரால் . . .
3. வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
கீழாகாமல் நீ மேலாகுவாய்
காற்றையும் நீ காணவும் மாட்டாய்
மழையையும் நீ பார்க்கவும் மாட்டாய்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
உன் எல்லைகள் செழிப்பாகுமே – அவரால் . . .

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks