என்ன கொடுத்தாலும் அது -ENNA KODUTHAALUM ATHU

என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)
என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)
துதிப்பேன் துதிப்பேன்
நான் துதிப்பேன்
இயேசு ராஜாவை துதிப்பேன் (2)
_என்ன கொடுத்தாலும்

1.தனிமையின் பாதையிலே
கூட வந்தீரே
தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)
உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே
உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்

2)கலங்கின நேரங்களில்
தேடிவந்தீரே
கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)
என் கதறலை எல்லாம்
கேட்டறிந்தீரே
என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks