என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha

என்னை தேடி தேடி
வந்த தேவனையே
போற்றி பாடி பாடி
என்றும் மகிழ்ந்திடுவேன்

1.ஆற்றிடுவார் என்னை
தேற்றிடுவார்
அரவணைத்து என்றும்
நடத்திடுவார்
கண்மணிபோல் காத்திடுவார் – என்னை

2.ஏந்திடுவார் என்றும்
தாங்கிடுவார்
மார்பொடென்னை என்றும்
அணைத்துக் கொள்வார்
கோணல்களை செவ்வையாக்கி
கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை

3.போற்றிடுவேன் துதி
சாற்றிடுவேன்
நேசர் அன்பை என்றும்
கூறிடுவேன்
துதிகனமும் மகிமை எல்லாம்
நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks