என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA

என்னில் அன்புகூர
இந்த உலகில் யாருண்டு
இயேசுவே உம்மைத் தவிர
யாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ…

என்னை உம் சாயலில்
படைத்தீரே என் தேவனே
நீரன்பென்றால் நானும்
அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ….

உம் அன்பு என்றும் மாறாதது
உம் அன்பு என்றும் நிலையானது
உம் அன்பு குறைவில்லாதது
உம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ….

1 முதல் 10 வரையுள்ள ஒர் விஷயம் அது நமக்கு அவசியம்

1.ஒன்றை செய்யுங்கள் :
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு
( பிலிப்பியர் 3 : 13 – 20 )

2. இரண்டையும் விட்டுவிடாதிருங்கள் :
* கிருபை
* சத்தியம்
( நீதிமொழிகள் 3: 2 – 3 )

3. மூன்றில் நிலைத்திருங்கள்:
* விசுவாசம்
* நம்பிக்கை
* அன்பு
( 1கொரிந்தியர் 13 : 13 )

4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
* இயேசு கிறிஸ்து
* ஒளியின் ஆயுதங்கள்
* புதிய மனுஷன்
* நீடிய பொறுமை
( ரோமர் 13 : 14 / எபேசியர் 4 : 24 /கொலோசெயர் 3:12 )

5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
* விபச்சாரம்
* அசுத்தம்
* மோகம்
* துரிச்சை
* பொருளாசை
( கொலோசெயர் 3 : 5 , 6 )

6. ஆறையும் எடுத்துக்கொள்ளுங்கள் :
* சத்தியம் என்னும் கச்சை
* நீதியென்னும் மார்க்கவசம்
* சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை
* விசுவாசமென்னும் கேடகம்
* இரட்சணியமென்னும் தலைச்சீரா
* தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்
( எபேசியர் 6 : 13 – 18 )

7. ஏழையும் வெறுத்து விடுங்கள் :
* மேட்டிமையான கண்
* பொய் நாவு
* குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை
* துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்
* தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்
* அபத்தம் பேசும் பொய்சாட்சி
* சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்
( நீதிமொழிகள் 6 : 16 – 19 )

8. எட்டையும் விட்டுவிடாதீர்கள் :
* விசுவாசம்
* தைரியம்
* ஞானம்
* இச்சையடக்கம்
* பொறுமை
* தேவபக்தி
* சகோதர சிநேகம்
* அன்பு
( 2 பேதுரு 1 : 5 – 9 )

9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள் :
ஆவியின் கனி :
* அன்பு
* சந்தோஷம்
* சமாதானம்
* நீடிய பொறுமை
* தயவு
* நற்குணம்
* விசுவாசம்
* சாந்தம்
* இச்சையடக்கம்
( கலாத்தியர் 5 : 22 – 23 )
ஆவியின் வரங்கள் :
* ஞானத்தை போதிக்கும் வசனம்
* அறிவை உணர்த்தும் வசனம்
* விசுவாசம்
* குணமாக்கும் வரங்கள்
* அற்புதங்களைச் செய்யும் சக்தி
* தீர்க்கதரிசனம் உரைத்தல்
* ஆவிகளப்பகுத்தறிதல்
* பற்பல பாஷைகளை பேசுதல்
* பாஷைகளை வியாக்கியானம்
( 1 கொரிந்தியர் 12 : 8 – 10 )

10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள் :
கர்த்தருடைய கற்பனைகள்.
( யாத்திராகமம் 20 : 3 – 17 )

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks