உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
உம் தோளில் கிடந்தால் ஜெயமே
உம் கைகள் என்னில்
கோர்த்தால் பரிசுத்தமே
உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்
உம் அன்பிலே மூழ்கணுமே
உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்

மணவாளனே உமக்காகவே
பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்
மணவாட்டி என்னை உம் வருகையில்
உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks