இயேசுவே நீர் போதுமேYesuve Neer Pothume

இயேசுவே நீர் போதுமே எப்போதுமே

நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது

நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

 

தனிமையின் பாதையில் தவித்திடும் வேளையில்

தாயைப்போல் என்னை தேற்றினீர்

சோதனை நேரத்தில்

சோர்ந்து நான் போகையில்

தூக்கியே தோளில் சுமந்தீர்

தாயின் கருவில் கண்டவரே

தாங்கி என்னை சுமந்தவரே

தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா

நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது

நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

 

மரணத்தின் பாதையில்

மனந்தளர்ந்த நேரத்தில் மருத்துவராய் வந்தீர்

மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட மணவாளனாய் வருவீர்

விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்

என்னை மீட்க ஜீவன் தந்தீர்

இயேசுவே உந்தன் அன்பு ஒன்றே போதுமே

நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது

நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks