அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI

அழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது மகிமையின் நாளது
மகிமையின் நாளது

1. இயேசுவின் இரத்தத்தினாலே
மாபெரும் மீட்பை அடைந்தோம்
வெண்ணாடையை தரித்துக் கொண்டு
ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
மறுகரையில் மன்னன் மாளிகையில்
மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்

2. பெயர்கள் எழுதப்பட்டோர்
புண்ணிய தேசம் காண்பார்
அங்கே ஒரு பாதை உண்டு
தூயர்கள் அதிலே நடந்து செல்வார்

3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
அந்நாளில் பலனைக் காண்பார்
உலகத்திலே துயரப்பட்டோர்
உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்

4. புத்தியுள்ள கன்னிகை போல
பக்தியாய் ஆயத்தமாவோம்
மகிமை தரும் மண நாளிலே
மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம்

5. கண்ணீர் கவலை இல்லை
பாவம் சாபமில்லை
துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks