அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum

அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம்
இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2
சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2
ஆத்துமாவை கொல்பவர்க்கேஅனுதினமும் அஞ்சிடுவோம்-2

தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான்
வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே-2
கழுதையும் கூட தன் எஜமானை அறியும்-2
கர்வம் கொண்ட மனிதனோ
கடவுளையேதேடுவதில்லை-2

அந்நிய தேவனை நாடுவோர்க்கு
வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு
நன்மைகள் தான் அதிகம்-2
இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்.-2
இயேசுவை மறக்கிற மனிதரெல்லாம் நரகத்துக்கே போவார்கள்-2

கிறிஸ்துவத்தை அழிக்க நினைத்தோர் அடியோடு அழிந்தார்கள்
கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டதல்ல கிறிஸ்துவாலே உருவானது-2
ஒவ்வொரு கிறிஸ்தவரும் உலகில் ஒவ்வொரு விதை தான்-2
கிறிஸ்தவரை அழித்தால் பல கிறிஸ்தவர்கள் உருவாவார்கள்-2

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks