சீயோனே ஆர்ப்பரி- Seeyonae Aarpari

பல்லவி

சீயோனே ஆர்ப்பரி
சிருஷ்டி கர்த்தரான உந்தன்
சர்வ வல்ல தேவனே

சரணங்கள்

1. சென்றதாம் பாதைகளிலே
சேதமே யாதுமணுகா
கண்மணி போலக் காவல் செய்தோனை
நன்றியுடன் பாடுவோம் – சீயோனே

2. நீக்கினார் பாவப்பாரமே
போக்கினார் சாபம் யாவுமே
தாழ்த்தியே நீசக் கோலமதாகி
தம் ஜீவனை ஈந்தாரே – சீயோனே

3. ஆதரவற்ற நேரத்தில்
ஆறுதலில்லா வேளையில்
அன்பாலணைத்து ஆறுதலீந்த
அன்பனைப் போற்றிடுவோம் – சீயோனே

4. நிந்தையில் சோதனையிலும்
வந்ததாலம் தொல்லைகளிலும்
மாண்டவரோடு எம்மையும் மாளா
ஆண்டவர் ஆதரித்தார் – சீயோனே

எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.

Honour all men. Love the brotherhood. Fear God. Honour the king.

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.

For what glory is it, if, when ye be buffeted for your faults, ye shall take it patiently? but if, when ye do well, and suffer for it, ye take it patiently, this is acceptable with God.

I பேதுரு : 2 ✝️

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks