சத்தம் கேட்டு சித்தம் செய்ய- Saththam Keattu siththam seiya

பல்லவி

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

சரணங்கள்

காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ)
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2)

1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் – சத்தம்

2. தேவை அதிகம் ஏராளம் ஆ ஏராளம் ஏராளமே
குஜராத் பீகார் யூபியில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார் – சத்தம்

3. உலக மாமிசப் பிடியினின்றும் ஆ பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு – சத்தம்

4. வெற்றியே தரும் ஆண்டவருக்கு ஆ காணிக்கை காணிக்கையே
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கை காணிக்கையே
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் – சத்தம்

யோவான் 14 :6 – அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

English: John 14:6 – Jesus Answered, “I Am The Way And The Truth And The Life. No One Comes To The Father Except Through Me.

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version