Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics

Deal Score+2
Deal Score+2

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ

  1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
  2. அவர் இடது கை என் தலை கீழ்
    வலக்கரத்தாலே தேற்றுகிறார்
    அவர் நேசத்தால் சோகமானேன்
    என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே
  3. என் பிரியமே ரூபவதி
    என அழைத்திடும் இன்ப சத்தம்
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
  4. என் நேசர் என்னுடையவரே
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
    மணவாளியே வா என்பாரே
    நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo